இரவில் தங்க சப்பரத்தில் வலம் வந்த ஜெயந்தி நாதர் -கிரிபிரகாரத்தில் கூடியிருந்த பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி நேற்றிரவு ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் வலம் வந்தார்.
முருகனின் அறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடிகிருத்திகை விழா வெகுசிறப்பாக நடந்தது.இதனையொட்டி நேற்று அதிகாலை ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தீபாரதனைஉதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிக்கால அபிஷேகம் , உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஜெயந்தி நாதர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் கிரிபிராகரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.
Next Story