விமான பயணிக்கு திடீர் நெஞ்சுவலி : 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற விமானம்
சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில், பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில், பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. 230 பயணிகளுடன் விமானம் துபாய்க்கு புறப்பட்ட நிலையில் பயணி ஜெயராமனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானம் கொண்டு வரப்பட்டு ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Next Story