அத்திவரதர் - கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகவில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

அத்திவரதர் தரிசன கூட்ட நெரிசலால் 6 பேர் பலியாகவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
x
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பலியானவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஜூலை 24ம் தேதிவரை 34 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளதாகவும், நெரிசலில் சிக்கியதால் ஆறு பேர் பலியாகவில்லை என்றும் தெரிவித்தார். தரிசனத்தை முடித்து விட்டு திரும்பிய போது உடல்நலக் குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக அவர்கள் இறந்ததாகவும், அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்