"நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் போது சம்பந்தப்பட்ட குற்றவாளி, வாழ்நாள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
x
கொலை வழக்கு ஒன்றில் ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக் மீரான் மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தொடரப்பட்ட 3 பேரின் மனுக்களை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, மன்னிப்பை மட்டும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு நிபந்தனையை, எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதி குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்