கல்லூரி மாணவர்கள் மோதிய விவகாரம் : நடிகர் விவேக் வேதனை

மாணவர்கள், கையில் ஆயுதம் எடுத்தால், எதிர்காலமே எதிரி ஆகிவிடும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் மோதிய விவகாரம் :  நடிகர் விவேக் வேதனை
x
மாணவர்கள், கையில் ஆயுதம் எடுத்தால், எதிர்காலமே எதிரி ஆகிவிடும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விவேக், மாணவர்கள் கையில் பட்டாகத்தியை கண்டது அச்சமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், இந்த வயதில் காதல் வந்தால் அது இதயத்தை மென்மை ஆக்கும் என்றும், கல்வி பயின்றால் அது வாழ்வை மேன்மை ஆக்கும் என்றும் குறிப்பிட்ட விவேக், கையில் ஆயுதம் எடுத்தால் எதிர்காலமே எதிரி ஆகிவிடும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்