இ.கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக டி.ராஜா தேர்வு : இனிப்புகள் வழங்கி உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் பிறந்த ஊரில் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இ.கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக டி.ராஜா தேர்வு : இனிப்புகள் வழங்கி உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் பிறந்த ஊரில் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒலக்காசி ஊராட்சியில் சித்தாத்தூர் எனும் கிராமத்தில் பிறந்த ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தற்போது தேசிய பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து டி.ராஜாவின் சகோதரர் கண்ணதாசன் கூறுகையில், தங்கள் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்விலும் டி.ராஜாவால் கலந்து கொள்ள முடியாது என்றும், கட்சி பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் கூறினார். டி.ராஜா ஒரு தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தது தங்கள் ஊருக்கு கிடைத்த பெருமை என்றும் கண்ணதாசன்  குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்