திருச்சி : புறா பந்தயம் - குட்டி கர்ணம் அடித்த புறாக்கள்
திருச்சி மாவட்டம் திருவாணைக்காவலில் மாவட்ட அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவாணைக்காவலில் மாவட்ட அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது. போட்டியில் 36 ஜோடி புறாக்கள் பங்கேற்றுள்ளன. போட்டி தொடங்கிய உடன் புறாக்களின் உரிமையாளர்கள் புறாக்களை ஒன்றாக பறக்கவிட்டனர். இதில் புறாக்கள் எல்லையை விட்டு வெளியே பறக்காமலும், வானத்தில் குட்டி கர்ணம் அடித்தபடி 5 மணி நேரம் சுற்ற வேண்டும் என்பது விதிமுறை. வெற்றி பெறும் புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.
Next Story