"உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும்" - மயில்சாமி அண்ணாதுரை

உலகிலேயே நிலவின் தென் துருவ பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழும் என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் - மயில்சாமி அண்ணாதுரை
x
உலகிலேயே நிலவின் தென் துருவ பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழும் என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பாங்க் ஆப் பரோடாவின் 112வது  நிறுவிய நாள் விழா நடைபெற்றது.  இதில் பங்கேற்று பேசிய மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 ஏவப்பட்ட பிறகு, உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் என்றார். ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய பிறகு, அமெரிக்கா இளைஞர்களுக்கு விஞ்ஞானத்தில் ஒரு புத்துணர்ச்சி வந்ததோ, அதே போன்று, சந்திரயான் -2 இன் பயணமும் இந்திய இளைஞர்களுக்கு விஞ்ஞான உலகில் ஆர்வத்தை அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்