மதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி

மதுராந்தகம் மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் காவல்துறை ஆய்வாளரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோனையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்துவருபவர் ஆரோக்கியராஜ். இவருடைய சொந்த ஊரான சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக போலீஸ் குடியிருப்பில் உளள்ள அவரது வீடு மற்றும் அவர் பணி புரியும் மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையத்திலும், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுளதாக கூறப்படுகிறது. அதனை கைப்பற்றியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்நு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் அதிகாரிகள் வீடுகளில் சோதனை :



மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் முன்பு திருப்போரூர் பார் உரிமையாளர் நெல்லையப்பன் கடந்த மே மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுப்புராஜ், பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.ஏற்கனவே ஆனந்தன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎஸ்பி, ஏ.டி.எஸ்.பி மற்றும் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்