அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி
x
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,  அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் என்று கூறினார்.தமிழகத்தில் உள்ள அணைகளின் பராமரிப்பை, மத்திய அரசு தன் வசம் எடுத்துக்கொள்வதற்கு மசோதா வழிவகை செய்வதாக  தெரிவித்த அவர், இந்த மசோதாவிற்கு முதல்வர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்'' என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தல் அணை பாதுகாப்பு மசோதா அறிமுகப்பபடுத்தப்பட்டதாக தெரிவித்தார்.அப்போதே அதிமுக கடுமையாக எதிர்த்ததாக அவர் கூறினார். இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டதாகவும் அவர் கூறினார். மசோதாவை திரும்ப பெற தமிழக அரசு  தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்'' என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்