குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நேற்று சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நேற்று சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் முதலில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அருவியின் மையப் பகுதியில் அதிகளவில் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்