மாட்டுக்கறி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவு : புகார் அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

நாகையில் மாட்டுக்கறி சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.
மாட்டுக்கறி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவு : புகார் அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்
x
சிக்கல் கிராமத்தை சேர்ந்த யூனுஸ் என்பவர் இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்து மககள் கட்சியினர் அளித்த புகாரை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்து மக்கள் கட்சி நாகை மாவட்ட செயலாளர் பார்த்திபன் நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்