பள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து, 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர் காவல்படை11 கோடியே 45 லட்சம் மதிப்பில் சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்து117 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 72 ஆயிரம் காவலர்களுக்கு ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் எரிபொருள் படி வழங்கப்படும் என்றும், இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story