பள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.
பள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து, 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர் காவல்படை11 கோடியே 45 லட்சம் மதிப்பில் சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில்  ஆயிரத்து117 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 72 ஆயிரம் காவலர்களுக்கு ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் எரிபொருள் படி வழங்கப்படும் என்றும், இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்