கடனை வசூலிக்க பொதுமக்களை நிர்பந்தம் செய்வதில்லை - கனரா வங்கித் தலைவர் மனோகரன் தகவல்

கடன்களை திரும்பப் பெறுவதற்கு பொதுத்துறை வங்கிகள் மக்களை நிர்பந்தம் செய்வதில்லை என்று கனரா வங்கி தலைவர் மனோகரன் கூறினார்.
கடனை வசூலிக்க பொதுமக்களை நிர்பந்தம் செய்வதில்லை - கனரா வங்கித் தலைவர் மனோகரன் தகவல்
x
கடன்களை திரும்பப் பெறுவதற்கு பொதுத்துறை வங்கிகள் மக்களை நிர்பந்தம் செய்வதில்லை என்று கனரா வங்கி தலைவர் மனோகரன் கூறினார். வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடன்களை வசூலிக்க பொதுமக்களுக்கு நிர்பந்தம் அளிப்பதில்லை என்றும், தவணை முறையில் கடனை வசூலிக்கும் வசதிகளை அளிப்பதாகவும் கூறினார். பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் மக்களுக்கான சேவையில் பாதிப்பு இருக்காது என்றும் மனோகரன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்