பள்ளி வருகை பதிவு இயந்திரத்தில் ஹிந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி பயோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரத்தில் இனி ஹிந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
பள்ளி பயோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரத்தில் இனி ஹிந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 70 இடங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்கர் படிப்பு தொடர்பான விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெறுகிறது.  சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன்,  ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ப்ளஸ் டூ முடித்த உடன் பட்டய கணக்காளர் படிப்பை படிப்பதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்