அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் பலி : அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்று, நெரிசல் மற்றும் மூச்சுத்திணறலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் பலி : அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
x
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்று,  நெரிசல் மற்றும் மூச்சுத்திணறலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.  அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தரிசனம் செய்ய வரும் மக்களை கட்டுப்படுத்திடவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல, தரிசனத்திற்கு சென்றபோது, நெரிசலில் சிக்கி நால்வர் உயிரிழந்ததற்கு, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.  தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்