தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர் கிரைம் காவல்நிலையங்கள் அமைக்க அரசு ஒப்புதல்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர் கிரைம் காவல்நிலையங்கள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர் கிரைம் காவல்நிலையங்கள் அமைக்க அரசு ஒப்புதல்
x
நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்கள் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுத்திட, அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சைபர் கிரைம் காவல்நிலையங்கள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இது குறித்து தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காவல்நிலையங்கள், ஆணையர் அலுவலகங்கள், மற்றும் 6 இடங்களில் சைபர் கிரைம் ஆய்வகங்கள் அமைக்கவும், அரசு அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இவ்வகை காவல்நிலையங்களில் பணியாற்ற விருப்பம் உள்ள காவல்துறை அதிகாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்