தஞ்சை விமான நிலைய திட்ட ஒப்பந்தப்புள்ளி திரும்பப் பெறப்பட்ட விவகாரம் - விமானப்படை அனுமதி கிடைக்காததால் ரத்து என தகவல்

இந்திய விமானப் படையிடம் இருந்துஅனுமதி கிடைக்கப் பெறாததால் ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
தஞ்சை விமான நிலைய திட்ட ஒப்பந்தப்புள்ளி திரும்பப் பெறப்பட்ட விவகாரம் - விமானப்படை அனுமதி கிடைக்காததால் ரத்து என தகவல்
x
உதான் திட்டத்தின் கீழ் தஞ்சைக்கு விமான சேவை தொடங்குவதற்காக, தஞ்சை விமான நிலையத் திட்டத்திற்காக ஒப்பந்தப் புள்ளியை, இந்திய விமான நிலைய ஆணையம் விடுத்ததாகவும், இதற்கான அனுமதி  இந்திய விமானப் படையிடம் இருந்துஅனுமதி கிடைக்கப் பெறாததால் ஒப்பந்தப் புள்ளி  ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.மக்களவை  தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்