அத்தி வரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...

அத்திவரதர் உற்சவத்தின் 18வது நாளான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து காட்சி தந்து வருகிறார்.
x
40 நாட்கள் நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 18வது நாளான இன்று, அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து காட்சி தந்து வருகிறார். நேற்று சந்திர கிரகணத்தை ஒட்டி பெரும்பாலானோர் கோவிலுக்கு வராத நிலையில், இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.  மக்கள் வாகனங்களை நகர் பகுதியில் கொண்டு வந்ததால், காஞ்சிபுரம் காந்தி சாலை பெருமாள் கோவில் அருகே, காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லக்கூடிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்