ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டை ஆக்கிரமித்த தொழிலதிபர்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்திய சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்திய சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மருத்துரையான்வலசு கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களின் சுடுகாட்டை, தொழிலதிபர் ஒருவர் ஆக்கிரமித்து, அந்த இடத்தில் மணல் நிரப்பியுள்ளார். இதையடுத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் வேறு இடத்தில் சுடுகாட்டை மாற்றித்தருவதாக பொதுமக்களை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ளாத மக்கள், அதே இடத்தை ஒதுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.
Next Story