மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் : கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சம்...

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காரணமாக கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் : கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சம்...
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராட்சத அலைகள் உண்டாகி கடற்பரப்பு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடல் அலைசீற்றம் காரணமாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் உடைந்து சேதமடைந்தன. கடற்கரையோரம் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலின் சிமெண்ட் தடுப்புகள் சரிந்து விழுந்தன. கடற்கரை பகுதி  முழுவதையும் கடல் அலைகள்  சூழ்ந்து விட்டதால் கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மாமல்லபுரம் வரும் சுற்றுலாப்பயணிகள் கடற்கரையில்  அமர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்