சென்னையில் பேருந்து மோதி 2 பேர் பலி...

சென்னை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் பேருந்து மோதி 2 பேர் பலி...
x
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த சிவா, நாகலட்சுமி, பவானி ஆகிய மூவரும் வேலை பார்த்து வந்தனர். வேளச்சேரியில் இவர்கள் தங்கியிருந்த நிலையில் இன்று காலை 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது பிராட்வே சென்ற மாநகர பேருந்து இவர்களின் வாகனத்தின் மீது மோதியது. இதில் பவானி மற்றும் நாகலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி 3 பேரும் ஒரே வாகனத்தில் சென்றதும், ஹெல்மெட் அணியாமல் இருந்ததுமே விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்