2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை
x
நாகை மாவட்டம், தாரண்யம் கடல் பகுதியில், படகில் இருந்து இறங்கி, நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக, வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு பகுதிக்கு இலங்கையில் இருந்து படகில் ஆட்கள் வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பில் இருந்த போலீசார், ஒருகிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் ஒருவரை இறக்கிவிட்டு, படகு ஒன்று திரும்பிச் சென்றதை பார்த்தனர்.அதிலிருந்து இறங்கிய நபர், நீந்தியே மணியன் தீவு பகுதியில் கரையேறியனார். அவரை வேதாரண்யத்தில் பிடித்து விசாரித்ததில், வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்