ரூ.30 லட்சம் சொத்தை கேட்டு மிரட்டும் பைனான்சியர் - மனைவி, குழந்தையுடன் தீக்குளிக்க உணவக உரிமையாளர் முயற்சி

பைனான்சியர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உணவக உரிமையாளர் தீக்குளிக்க முயன்றார்.
ரூ.30 லட்சம் சொத்தை கேட்டு மிரட்டும் பைனான்சியர் - மனைவி, குழந்தையுடன் தீக்குளிக்க உணவக உரிமையாளர் முயற்சி
x
பைனான்சியர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, ஆட்சியர் அலுவலகத்தில், குடும்பத்துடன் உணவக உரிமையாளர் தீக்குளிக்க முயன்றார். அயோத்தியாபட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், மனைவி மற்றும் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரித்தில், தமது சொத்தை 10 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்ததாகவும், பணம் வழங்கிய பிரபு, சொத்தை எழுதிக்கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதால், குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்