மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக்கொள்கை: "பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம்" - மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

வரைவு தேசிய கல்விக்கொள்கை மீது வரும் 25ம் தேதிக்குள் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக்கொள்கை: பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்
x
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டு துறை அண்மையில்  வெளியிட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையை தமிழாக்கம் செய்து, தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் www.tnscert.org என்னும் இணையதள முகவரியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு வரும் 25 ம் தேதிக்குள் வரைவு தேசியக்கல்விக்கொள்கை குறித்து  கருத்து தெரிவிக்கும்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. secert.nep2019@gmail.com என்னும் மின்அஞ்சல் மூலமும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், டி.பி.ஐ.வளாகம், கல்லூரிச் சாலை,நுங்கம்பாக்கம், சென்னை-6 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரைவு தேசியக் கல்விக் கொள்கை மீதான கருத்தரங்குகள் கருத்து கேட்பு கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்