சென்னை விமான நிலையம் : புதிய வாகன பார்கிங் திட்டம் அறிமுகம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் புதிய வாகன திட்டம் நாளை நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது
சென்னை விமான நிலையம் : புதிய வாகன பார்கிங் திட்டம் அறிமுகம்
x
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் புதிய வாகன திட்டம் நாளை நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, விமான நிலையத்திற்கு வாகனங்கள் வந்தால் முதல் 10 நிமிடங்களுக்கு இலவசமாக இருந்த காலகெடு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் புறப்பாடு பகுதிக்கு வரும் வாகனங்கள் எந்தவித கட்டணமின்றி இலவசமாக வந்து பயணிகளை இறக்கி விட்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களை புறப்பாடு முனையங்களில் நிறுத்தி வைத்தால், வாகன கட்டணம் 4 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களுக்கு 30 நிமிடங்களுக்கு 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என்றும், வாகனங்கள் வெளியேறும்போது அவற்றை திருப்பி வழங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்