கஞ்சா கடத்தி வந்த கார் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - சினிமா பாணியில் சேசிங்

ஆந்திராவில் இருந்து காரில் கடத்திச் சென்ற போதைப் பொருளை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
x
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு போதைப் பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து பெரம்பலூர் அருகே வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை தனிப்படை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சீறிப்பாய்ந்து சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் காரை வேகமாக விரட்டிச் சென்றனர். காரை பின்பக்கமாக மோதியும் நிற்காததால் துப்பாக்கியால் காரை நோக்கி சுட்டனர். இதையடுத்து துப்பாக்கி முனையில் காரை சுற்றி வளைத்த  போலீசார் அதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கமுதியை சேர்ந்த முனியசாமி மற்றும் அவரது கூட்டாளியான வழிவிடும் முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்