அங்கன்வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா? - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர்களாக நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர்களாக நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அங்கன்வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா என்று ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, அங்கன்வாடியில் உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் நியமிக்கப்படவுள்ள உபரி ஆசிரியர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அரசிற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகின்ற ஜூலை 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Next Story