ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மேல் முறையீடு

தேச துரோக வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மேல் முறையீடு
x
தேச துரோக வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், யூகங்களின் அடிப்படையில், சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். காவல்துறை சமர்ப்பித்த சாட்சியங்கள் அடிப்படையிலான தீர்ப்பாக இல்லாமல், சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தனிப்பட்ட முடிவாக இந்த தீர்ப்பு இருப்பதாகவும் வைகோ தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்