5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் 55 வயது முதியவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்ஸோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.
5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் 55 வயது முதியவர்  கைது
x
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்ஸோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர். தொடர் பாலியல் தொல்லை குறித்து மாணவி, தெரிவித்த தகவலை அடுத்து, நேற்று அவரது தாயாரும் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மாணவியை பின்தொடர்ந்து வந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் புழல் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பதும், பல பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்து. இதனையடுத்து ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்