சமூக ஆர்வலர் நந்தினி ஜாமீனில் விடுதலை : அவமதிப்பு வழக்கில் திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி நேரில் ஆஜரான நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் வழக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
x
டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக  தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில்  கடந்த மாதம் 27-ம் தேதி நேரில் ஆஜரான நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் வழக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்நிலையில் இவ்வழக்கின் மேல்விசாரணைக்கு நந்தினி யும் ஆனந்தனும்  திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரையும் சொந்த ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்