தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story