மாணவர்களுக்கு புத்தகங்கள் தரவில்லை என புகார் : அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படாததை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படாததை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னவால் கோட்டை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கல்வி அதிகாரி, பாட நூல்களை உடனடியாக வரவழைத்து மாணவர்களுக்கு வழங்கினார்.
Next Story