குற்றாலம் அருவிகளில் மிதமான நீர்வரத்து..

நெல்லை மாவட்டத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது.
குற்றாலம் அருவிகளில் மிதமான நீர்வரத்து..
x
நெல்லை மாவட்டத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மிதமான நீர்வரத்து உள்ளது. குற்றாலம் பிரதான அருவியில் விழும் மிதமான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். தென் மேற்கு பருவமழை காலதாமதமாக தொடங்கிய நிலையில், இன்னும் போதியளவு பெய்யாததால் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்