தாராபுரம் : பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளை நிறுத்தாத ஓட்டுனருக்கு எதிர்ப்பு - பெற்றோர் சாலை மறியல்
தாராபுரத்தில் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளை இறக்கி விடாமல் 30 கிலோ மீட்டர் தாண்டி இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுனருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாராபுரத்தில் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளை இறக்கி விடாமல் 30 கிலோ மீட்டர் தாண்டி இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுனருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் படிக்கும் மாணவிகள் 4 பேர் மற்றும் ஆசிரியை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்களை மங்களாம்பாளையத்தில் இறக்கிவிடாமல் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தாண்டி பழனியில் இறக்கிவிட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தாராபுரம் - பழனி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story