தாராபுரம் : பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளை நிறுத்தாத ஓட்டுனருக்கு எதிர்ப்பு - பெற்றோர் சாலை மறியல்

தாராபுரத்தில் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளை இறக்கி விடாமல் 30 கிலோ மீட்டர் தாண்டி இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுனருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாராபுரம் : பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளை நிறுத்தாத ஓட்டுனருக்கு எதிர்ப்பு - பெற்றோர் சாலை மறியல்
x
தாராபுரத்தில் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளை இறக்கி விடாமல் 30 கிலோ மீட்டர் தாண்டி இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுனருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் படிக்கும் மாணவிகள் 4 பேர் மற்றும் ஆசிரியை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்களை மங்களாம்பாளையத்தில் இறக்கிவிடாமல் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தாண்டி பழனியில் இறக்கிவிட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தாராபுரம் - பழனி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்