மதுரை : மது போதையில் அரங்கேறிய அவலம் - போலீசாரே விபத்தை ஏற்படுத்தியது அம்பலம்
மதுரை திருநகர் சோதனைச் சாவடி அருகே போலீசாரே, மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருநகர் சோதனைச் சாவடி அருகே போலீசாரே, மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று முதலமைச்சர் தூத்துக்குடிக்கு வருகை தந்த நிலையில், அதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், திருநகர் வாகன சோதனை சாவடியில், மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த காவலர் ஒருவர் பாதுகாப்பு தடுப்பை இடித்து தள்ளியதில், மில்டன் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சமீபத்தில் போலீசார் லத்தியால் தாக்கியதில், வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மது போதையில் காவலர் ஏற்படுத்திய இந்த விபத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story