நாகர்கோவிலில் காரை கடத்திய கும்பல் : ஜி.பி.எஸ். உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓட்டுநரை கட்டி போட்டு காரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவிலில் காரை கடத்திய கும்பல் : ஜி.பி.எஸ். உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார்
x
நாகர்கோவில் கோணம் பகுதியை சேர்ந்த சஜின்ராஜ். வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில், காரை தனது வீட்டு முன் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சஜின்ராஜ் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த 5 இளைஞர்கள் சஜின்ராஜை தாக்கி கயிறால் கட்டி விட்டனர். பின்னர் வீட்டின் முன்பு இருந்த காரை கடத்தி சென்றனர். அண்டை வீட்டு இளைஞர் சஜின்ராஜை தேடி வந்தபோது அவர் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். கயிறை அவிழ்த்த பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் உதவியுடன் கார் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, தக்கலை போலீசார் மூலம் காரை வழிமறித்து 5 பேரையும் கைது செய்ததுடன் காரையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், காரை திருடிய கும்பல், நாகர்கோவில் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது

Next Story

மேலும் செய்திகள்