வேடசந்தூர் : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கண்டெய்னர் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேடசந்தூர் : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கண்டெய்னர் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நூல் ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி, திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் செல்வதற்காக திரும்பியபோது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில், லாரியின் கண்டெய்னர் மட்டும் தனியாக கவிழ்ந்து, சாலையின் குறுக்கே கிடந்ததால், 2 மணி நேரத்திற்கும் மேலாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த கண்டெய்னர், கிரேன் மூலம் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டு, போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்