மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் : திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், சட்டப் பேரவைச் செயலாளரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் : திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
x
திமுக தலைமை அறிவித்தப்படி, தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை செயலாளரிடம் மனு தாக்கல் செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலின் போது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தலா ஒரு சீட் வழங்க மதிமுகவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக அக்கட்சியின் வேட்பாளர் பொதுச் செயலாளர்  வைகோ வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் அதிகாரியிடம் மூவரும் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். 23 ஆண்டுகளுக்கு பிறகு வைகோ, ராஜ்யசபா உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்