நாகை : பெண் வழக்கறிஞர் மீது சாராய வியாபாரிகள் கொடூர தாக்குதல்

நாகை மாவட்டத்தில் பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாராய வியாபாரிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகை : பெண் வழக்கறிஞர் மீது சாராய வியாபாரிகள் கொடூர  தாக்குதல்
x
திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் நிர்மலா. இவரது வீட்டின் எதிரே வசித்து வரும் ஏசுராஜ் என்பவர் கள்ளச் சாராய தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. காரைக்காலில் இருந்து மது கடத்தி வரும் போது போலீசாரிடம் ஏசுராஜ் பிடிபட்டுள்ளார். இந்நிலையில்கடந்த 3-ம் தேதி வழக்கறிஞர் நிர்மலா மற்றம் அவரது குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிர்மலா, அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளசாராய கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்ததால் ஆத்திரம் அடைந்த ஏசுராஜ், அடியாட்கள் மூலம் நிர்மலா தேவி குடும்பத்தினரை தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏசுராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்