மாணவனுக்கு "டிப்தீரியா" நோய் தாக்குதல் : "தடுப்பூசி போட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்" - அதிகாரிகள் கோரிக்கை

கேரளாவில் பரவி வரும் 'டிப்தீரியா' தொற்றுநோய் தமிழ்நாட்டிலும் பரவ தொடங்கியுள்ளது.
மாணவனுக்கு டிப்தீரியா நோய் தாக்குதல் : தடுப்பூசி போட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - அதிகாரிகள் கோரிக்கை
x
கேரளாவில் பரவி வரும் 'டிப்தீரியா' தொற்றுநோய் தமிழ்நாட்டிலும் பரவ தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவனுக்கு 'டிப்தீரியா' நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் மேலும் பரவாமல் இருக்க 15 க்கு உட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு டிப்தீரியா தடுப்பூசி போடவுள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதார துறை அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்