குவைத்தில் உயிர் தப்பிக்க 3- வது மாடியில் இருந்து குதித்த பெண் - சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார்

குவைத்தில் வேலைக்கு சென்று கொடுமைகளால் உயிர் தப்பிக்க 3-வது மாடியிலிருந்து குதித்து உயிர்தப்பிய பெண் சென்னை திரும்பினார்.
குவைத்தில் உயிர் தப்பிக்க 3- வது மாடியில் இருந்து குதித்த பெண் - சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார்
x
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுமதி. கணவரை பிரிந்து வாழும் இவர் வேலைக்காக குவைத் சென்றுள்ளார். ஏஜெண்டுகளால் வீட்டு வேலையில் சேர்த்து விடப்பட்ட அவர், கடும் கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளார். உணவு, உறக்கம் இல்லாமல் நாள்தோறும் சுமார் 20 மணி வேலை பார்த்து வந்துள்ளார். வேலை ஒழுங்காக செய்யவில்லை என்றால் அடித்து உதைத்து இருட்டு அறையில் பூட்டி வைத்து கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுமதி, அங்கிருந்து தப்பிக்க வீட்டின் 3-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறவனம், தமிழ் அமைப்புகள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் முயற்சியின் காரணமாக சுமதி இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் தாயகம் திரும்ப உதவி அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்