காதல் திருமணம் செய்தவர்கள் கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி, வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த சோலை ராஜ் என்பவரும், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரும் உப்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும், வீட்டாரின் எதிர்ப்பை மீறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். வேலை பார்க்கும் உப்பளம் அருகே தனியாக தங்கியிருந்த அவர்களது வீடு இன்று நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேக மடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த புதுமண தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீசார், கொலை தொடர்பாக ஜோதியின் உறவினர் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆணவக் கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story