"அத்தி வர‌தர் தரிசன நிகழ்ச்சி குறித்து அறிக்கை வேண்டும்" - இந்து சமய அறநிலைய துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மற்றும் பூஜை தொடர்பான விவரங்களை அறிக்கையாக, தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தி வர‌தர் தரிசன நிகழ்ச்சி குறித்து அறிக்கை வேண்டும் - இந்து சமய அறநிலைய துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடு  மற்றும் பூஜை தொடர்பான விவரங்களை அறிக்கையாக, தாக்கல்  செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலை ஆண்டாண்டு காலமாக பாதுகாத்து வரும் தாதாச்சாரியர் குடும்பத்தை சேர்ந்த சம்பத்குமார் என்பவர், அத்தி வரத‌ருக்கு பூஜை செய்ய தங்களை அனுமதிப்பதில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, அத்தி வரதருக்கு பூஜைகள் செய்ய சம்பத்குமாருக்கு அனுமதி வழங்கியதோடு, அத்தி வரத‌ர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு, பூஜைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையதுறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை வரும் 5 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய  உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்