மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் : "எந்த முன்னேற்றமும் இல்லை" - நீதிபதிகள் அதிருப்தி

சென்னை மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான முழு விவரங்களையும், வருகிற 5ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் : எந்த முன்னேற்றமும் இல்லை - நீதிபதிகள் அதிருப்தி
x
சென்னை மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான முழு விவரங்களையும், வருகிற 5ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை திட்ட பணிகள்  2016 ஆம் ஆண்டில் தொடங்கிய நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்