முதலமைச்சரை சந்தித்த அதிருப்தி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி

தினகரன் ஆதரவாளராக கருதப்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
x
தினகரன் ஆதரவாளராக கருதப்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி, முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைசெல்வன் , அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி ஆகியோர் தினகரனின் ஆதரவாளராக கருதப்பட்டனர். ஆனால் அ.ம.மு.க. என்ற கட்சி உருவான பிறகு அவர்கள் தினகரன் ஆதரவில் இருந்து பின்வாங்கினர். இருந்தபோதிலும், விளக்கம் கேட்டு  3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு 3 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றம் சென்று , தடை உத்தரவு பெற்று வந்தனர். இந்நிலையில், இன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி, முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார். இதனைத் தொடர்ந்து ரத்தினசபாபதி, சபாநாயகரை சந்தித்தார்.இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து தான் ஏன் பின்வாங்கினேன் என விளக்கினார்.

Next Story

மேலும் செய்திகள்