சென்னை : மின்கசிவு காரணமாக ஏசி தீப்பிடித்து எரிந்தது - 4 பேர் உயிர் தப்பினர்

சென்னையில், மின்கசிவு காரணமாக ஏசி தீப்பிடித்து எரிந்தது. அந்த வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 4 பேர் இந்த விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினர்.
சென்னை : மின்கசிவு காரணமாக ஏசி தீப்பிடித்து எரிந்தது - 4 பேர் உயிர் தப்பினர்
x
சென்னை, போரூரை சேர்ந்த பிரகாஷ் மேனன் என்பவர் தனது மனைவி பிந்து மற்றும் 2 மகன்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டின் வரவேற்பறையில் இருந்த ஏசி சரியாக வேலை செய்யாததால், அதனை "ஆப்" செய்யாமலேயே 4 பேரும் அருகில் இருந்த மற்றொரு அறைக்கு சென்று தூங்கியுள்ளனர். அப்போது குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏ.சி-யில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனால் ஏற்பட்ட புகை வீடு முழுவதும் பரவியதையடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டதால் பிரகாஷ் மேனன் உள்ளிட்ட 4 பேரும் அறையை விட்டு வெளியே வந்துள்ளனர்.

அப்போது வரவேற்பறையில் எரிந்த தீயை அணைக்க முற்பட்டபோது  பிரகாஷ் மேனன் மற்றும் அவரின் மனைவி பிந்துவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் மகன்கள் கிரண் மற்றும் ஆதித்யா ஆகியோர் காயம் ஏதுமின்றி வெளியேறினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். காயம் அடைந்த பிரகாஷ் மேனன் மற்றும் பிந்து சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தாம்பரத்தில்  குளிர்சாதன பெட்டி வெடித்து  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்