அத்திவரதர் தரிசன நிகழ்வை காண ரயில்வே சிறப்பு ஏற்பாடு : அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசன நிகழ்வை காணவரும் பக்தர்களுக்கு வசதியாக இன்று முதல் அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அத்திவரதர் தரிசன நிகழ்வை காண ரயில்வே சிறப்பு ஏற்பாடு : அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்
x
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசன நிகழ்வை காணவரும் பக்தர்களுக்கு வசதியாக இன்று முதல் அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று முதல் அரக்கோணத்தில் இருந்து காலை 11 மணிக்கு இந்த சிறப்பு ரயில் புறப்பட்டு 11.52 மணிக்கு காஞ்சிபுரத்தை அடையும். அங்கிருந்து புறப்படும் சிறப்பு ரயில், 12.55 மணிக்கு செங்கல்பட்டுக்கு சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 2.15 மணிக்கு காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து அரக்கோணத்துக்கு பிற்பகல் 3.15 மணிக்கு சென்று சேரும்.


Next Story

மேலும் செய்திகள்