தமிழகத்திற்கு படகில் வந்த இலங்கை இளைஞர் கைது

ஆறுகாட்டு துறை கிராமத்தில் சுற்றிதிரிந்த இலங்கையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்திற்கு படகில் வந்த இலங்கை இளைஞர் கைது
x
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டு துறை கிராமத்தில் சுற்றிதிரிந்த இலங்கையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருகோணமலையை சேர்ந்தவர்  என்றும், படகு மூலம் வேதாரண்யம் வந்ததும், தெரியவந்தது. இதனையடுத்து, அவர் வந்த படகை பறிமுதல் செய்த போலீசார்,  தப்பியோடிய இரு இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்