நீரை சேமிக்கும் மும்மாரி திருவள்ளூர் திட்டம் தீவிரம் - பொது மக்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், 'மும்மாரி திருவள்ளூர்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
x
திருவள்ளூர் மாவட்டத்தில், 'மும்மாரி திருவள்ளூர்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர்  பஞ்சத்தை சீர்செய்யும் விதமாக, நீர் நிலைகளை தூர்வாரி, கரைகளை வலுப்படுத்தி, சீரமைக்கவும், கரையைச் சுற்றி மரக்கன்றுகளை வைத்து பராமரிக்கவும், 'மும்மாரி திருவள்ளூர்' என்ற திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முதல் கட்டமாக, காக்களூர் பகுதியில் உள்ள தாமரைக் குளத்தை, தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில்  பொது மக்களும், தன்னார்வலர்களும் பங்கேற்க,  ஆட்சியர் அழைப்பு விடுத்தார்

Next Story

மேலும் செய்திகள்